அறுபத்து மூன்று நாயன்மார்கள்


சமய குரவர்கள்

முற்காலத்தில் (~கி.பி 400-1000) தமிழ் நாட்டில் வாழ்ந்திருந்த சிறந்த சிவனடியார்கள் சிலர் நாயன்மார்கள் எனப் போற்றப்படுகின்றார்கள். இவர்கள் அறுபத்துமூவராவர். நாயன்மார்களில் அப்பர், சம்பந்தர், சுந்தரர் ஆகிய மூவரும், நாயன்மார்கள் வரிசையில் தனியாக இல்லாத மாணிக்கவாசகர் அவர்களும் முதன்மையானவர்கள். இந்த நால்வரும் சைவ சமய குரவர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். சைவத் திருமுறைகள் என அழைக்கப்படும் 12 திருமுறைகளின் தொகுதியில் நாயன்மார்களின் பாடல்கள் தொகுக்கப்பட்டுள்ளன. முதல் மூன்று திருமுறைகள் திருஞான சம்பந்தராலும், திருமுறைகள் 4,5,6 திருநாவுக்கரசராலும், 7ஆம் திருமுறை சுந்தரராலும் ஆக்கப்பட்ட பண்ணோடு அமைந்த இசைப்பாடல்களாகும். நாயன்மார்களில் சிலரே சமய நூல்களில் புலமை உடையவர்கள். மற்றவர்கள் மிகச் சிறந்த பக்தர்கள் மட்டுமே. பலரும் பல்வேறு தொழில்கள் செய்து உயிர்வாந்தவர்கள். இறையருள் பெற பக்தி மட்டுமே போதுமானது என்பதும் எல்லோரும் இறைவன் திருவடிகளை அடையலாம் என்பதுமே இவர்கள் வாழ்க்கை தரும் பாடமாக உள்ளது. இவர்களின் வரலாறு சேக்கிழாரால், பெரியபுராணம் என்ற பெயரில் எழுதப்பட்டது. அறுபத்துமூன்று நாயன்மார்களில் மூவர் பெண்கள். கி.பி. 3-4 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த காரைக்கால் அம்மையார் நாயன்மார்களில் காலத்தால் மூத்தவர். தான் பிறந்து வாழ்ந்த ஊரின் பெயராலேயே அறியப்படும் காரைக்கால் அம்மையாரின் இயற்பெயர் புனிதவதியார் ஆகும். மதுரையை ஆண்ட கூன் பாண்டியன் என்ற பாண்டிய மன்னன் நின்றசீர் நெடுமாற நாயனார் என்ற அறியப்படுகிறார். அவர் மனைவி மங்கையர்கரசியார் என்பவர் நாயன்மார்களில் மற்றொரு பெண் ஆவார். திருநாவலுரைச் சேர்ந்த சடையனார் என்ற நாயன்மாரின் மனைவி இசைஞானியார் மூன்றாவது பெண் நாயன்மார் ஆவார். இவர்களின் மகன் சுந்தரமூர்த்தியார் சைவக்குரவர் நால்வருள் ஒருவரும் நாயன்மார்களில் ஒருவரும் ஆவார்.
சிவநெறி பூண்ட நாயன்மார்கள் பட்டியல் ஒரு பார்வையில்Tamil Om4.JPG
எண் பெயர் குலம் பூசை நாள் நின்ற நெறி
1 அதிபத்தர் பரதவர்

2 அப்பூதியடிகள் அந்தணர்

3 அமர்நீதி நாயனார் வணிகர் ஆனி பூரம்
4 அரிவட்டாயர் வேளாளர்

5 ஆனாய நாயனார் இடையர்

6 இசைஞானியார் ஆதி சைவர் சித்திரை
7 இடங்கழி நாயனார் செங்குந்தர் குல குறுநில மன்னர்[1] [2]

8 இயற்பகை நாயனார் வணிகர்

9 இளையான்குடிமாறார் வேளாளர்

10 உருத்திர பசுபதி நாயனார் அந்தணர்

11 எறிபத்த நாயனார்

செங்குந்தர் [3] [4]



12 ஏயர்கோன் கலிகாமர் வேளாளர் ஆனி ரேவதி
13 ஏனாதி நாதர் சான்றார்

14 ஐயடிகள் காடவர்கோன் குறுநில மன்னர்

15 கணநாதர் அந்தணர்

16 கணம்புல்லர்

செங்குந்தர் [5] [6]



17 கண்ணப்பர் வேடர்

18 கலிய நாயனார் செக்கார்

19 கழறிற்ற்றிவார் அரசர்

20 கழற்சிங்கர் குறுநில மன்னர் வைகாசி பரணி
21 காரி நாயனார்

செங்குந்தர் [7] [8]



22 காரைக்கால் அம்மையார் வணிகர்

23 குங்கிலியகலையனார் அந்தணர்

24 குலச்சிறையார் மரபறியார்

25 கூற்றுவர்

செங்குந்தர் குல குறுநில மன்னர் [9] [10]



26 கலிக்கம்ப நாயனார் வணிகர்

27 கோச் செங்கட் சோழன் அரசன்

28 கோட்புலி நாயனார் வேளாளர்

29 சடைய நாயனார் ஆதி சைவர்

30 சண்டேஸ்வர நாயனார் அந்தணர்

31 சத்தி நாயனார் வேளாளர்

32 சாக்கியர் வேளாளர்

33 சிறப்புலி நாயனார் அந்தணர்

34 சிறுதொண்டர் சாலியர் சித்திரை பரணி
35 சுந்தரமூர்த்தி நாயனார் ஆதி சைவர்

36 செருத்துணை நாயனார் வேளாளர் 8 8
37 சோமசிமாறர் அந்தணர் வைகாசி ஆயிலியம்
38 தண்டியடிகள்

செங்குந்தர் [11] [12]



39 திருக்குறிப்புத் தொண்டர் ஏகாலியர் சித்திரை சுவாதி
40 திருஞானசம்பந்தமூர்த்தி அந்தணர் வைகாசி மூலம்
41 திருநாவுக்கரசர் வேளாளர் சித்திரை சதயம்
42 திருநாளை போவார் புலையர்

43 திருநீலகண்டர் குயவர்

44 திருநீலகண்ட யாழ்ப்பாணர் பாணர் வைகாசி மூலம்
45 திருநீலநக்க நாயனார் அந்தணர் வைகாசி மூலம்
46 திருமூலர் இடையர்

47 நமிநந்தியடிகள் அந்தணர் வைகாசி பூசம்
48 நரசிங்க முனையர்

செங்குந்தர் குல குறுநில மன்னர் [13] [14]



49 நின்றசீர் நெடுமாறன் அரசர்

50 நேச நாயனார் சாலியர்

51 புகழ்சோழன் அரசர்

52 புகழ்த்துணை நாயனார் ஆதி சைவர் ஆனி ஆயிலியம்
53 பூசலார் அந்தணர்

54 பெருமிழலைக் குறும்பர்

செங்குந்தர்[15] [16]



55 மங்கையர்க்கரசியார் அரசர் சித்திரை ரோகிணி
56 மானக்கஞ்சாற நாயனார் வேளாளர்

57 முருக நாயனார் அந்தணர் வைகாசி மூலம்
58 முனையடுவார் நாயனார் வேளாளர்

59 மூர்க்க நாயனார் வேளாளர்

60 மூர்த்தி நாயனார் வணிகர்

61 மெய்ப்பொருள் நாயனார்

செங்குந்தர் குல குறுநில மன்னர்[17] [18]



62 வாயிலார் நாயனார் வேளாளர்

63 விறன்மிண்ட நாயனார் வேளாளர் சித்திரை திருவாதிரை

0 comments:

Post a Comment